

தருமபுரி: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக ரூபத்தின் 1.32 கோடி சொத்து சேர்த்ததாக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கெரகோட அளியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீடு மற்றும் அதே பகுதியில் 6 இடங்களில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.