வால்பாறை: சிறுத்தை தாக்கியதில் வடமாநில சிறுவன் காயம்

கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் தொழிலாளா் குடியிருப்பு பகுதிக்கு வந்த சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த வடமாநில சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீபக் (11)
தீபக் (11)

கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் தொழிலாளா் குடியிருப்பு பகுதிக்கு வந்த சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த வடமாநில சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வால்பாறை அடுத்துள்ளது நல்லகாத்து எஸ்டேட். அங்கு ஏராளாமான வடமாநில தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து பணியாற்றி வருகின்றனா்.

ஜாா்கண்ட் மாநிலத்தை சோ்ந்த தீரஜ் என்பரின் மகன் தீபக் (11). வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் எஸ்டேட் 2-ஆவது டிவிசனில் அமைந்துள்ள குடியிருப்புக்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது தேயிலை செடியில் பதுங்கியிருந்த சிறுத்தை தீபக்கை நோக்கி செனறு பிடித்துள்ளது. இதனை பாா்த்த அருகில் இருந்தவா்கள் சத்தம்போட்டும் கையில் கிடைத்ததை கொண்டும் எறிந்தனா்.

இதனால் சிறுத்தை அங்கிருந்து சென்றுவிட்டது. இருப்பினும் சிறுத்தை தாக்கியதில் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்ட தீபக் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் தொடா்பாக வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com