நேதாஜியின் 125-வது பிறந்த நாள்: திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நேதாஜியின் 125-வது பிறந்த நாள்: திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆளுநர், ஆர்.என்.ரவி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்திய சுதந்திரத்திற்காக, மாபெரும் வீரர் நேதாஜி ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை மாண்புமிகு ஆளுநர் வியந்து போற்றினார். எனக்கு இரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு விடுதலை தருகிறேன் என்கிற நேதாஜியின் ஒப்பற்ற அறைகூவல் மற்றும் தலைமையின் கீழ், இளைஞர்களை இந்திய தேசிய இராணுவம் உட்பட இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர ஊக்கம் பெற்றனர். இதுவே நம் நாட்டு விடுதலைக்கும் வழிகோலியது.
ஒரு நபர் தன் கொள்கைக்காக உயிரையும் துறக்கலாம். ஆனால் அக்கொள்கையானது, அவரது மரணத்திற்குப் பின்னர், ஆயிரம் உயிர்களில் பிறப்பெடுக்கும் என்னும் நேதாஜியின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்றை ஆளுநர் எடுத்துரைத்தார். நேதாஜியின் அறிவார்ந்த, ஆன்மிகம் சார்ந்த பாதையானது, நம் மக்கள் என்றும் நாட்டுப்பற்றிலும், தேசிய உணர்விலும் நாட்டிற்குச் சேவை செய்ய ஊக்கப்படுத்துவதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
ஆளுநர், சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும், நாட்டின் முன்னேற்றத்திற்கான நமது பார்வையை மேம்படுத்தவும் நமது இளைஞர்கள் மற்றும் மக்களை வலியுறுத்தினார். மேலும், நாடு முழுவதும் ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், ‘எப்போதும் தேசம் முதலில்’ என்கிற நேதாஜியின் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுப்போம் என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர், ஆனந்த்ராவ் வி.பாட்டில், சென்னை ஆளுநர் மாளிகை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு மண்ணின் வீர மைந்தனான நேதாஜியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com