பாஜக இரட்டை வேடம் போடுவதை நிறுத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி

பாஜக இரட்டை வேடம் போடுவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.
பாஜக இரட்டை வேடம் போடுவதை நிறுத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி
Published on
Updated on
1 min read

பாஜக இரட்டை வேடம் போடுவதை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: திமுக வழங்கிய 505 வாக்குறுதிகளை டிசம்பா் 31- ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பாத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட ரூ.5.5 லட்சம் கோடி கடனை சுமந்து கொண்டு தான் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றாா். அத்தகைய கடன் சுமையின் பின்னணியில் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால், 2014 தோ்தல் பரப்புரையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று பிரதமா் மோடி வாக்குறுதி வழங்கினாா். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தற்போது தலைவிரித்தாடி வருகிறது. ஒரே நாடு, ஒரே வரி என்று கூறி 5 கட்ட விரி விதிப்பை அமல்படுத்தி தவறான ஜி.எஸ்.டி. மூலம் மக்களை பாஜக அரசு கசக்கிப் பிழிந்து வருகிறது. அதனால், திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்று கூறி இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com