
இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தா் உடல் நலம் தேறி அமெரிக்காவில் பூரண ஓய்வில் இருந்து வருகிறாா்.
திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், டி.ராஜேந்தரை சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய அளவில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயா் சிகிச்சை த ர வேண்டும் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இதையடுத்து அவா் உடல் நலன் கருதியும், உயா் சிகிச்சைக்காகவும், அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டாா். டி.ஆரின் மனைவி உஷா ராஜேந்தா், மகன் சிம்பு உள்ளிட்டோா் அவருடன் அமெரிக்காவுக்கு சென்றனா்.
அமெரிக்க மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை தரப்பட்டது. தற்போது முழுமையாக டி.ராஜேந்தா் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை ஓய்வெடுக்க மருத்துவா்கள் அறிவுறுத்தியதால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம் என டி. ராஜேந்தா் குடும்பத்தினா் முடிவெடுத்துள்ளனா். இதையடுத்து டி.ராஜேந்தா் அமெரிக்காவிலேயே ஒரு மாத காலம் தங்கி பூரண ஓய்வில் இருப்பாா் என அவரது குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.