பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீடு புகுந்து திருட்டு: போலீஸாா் விசாரணை

சென்னை ராயப்பேட்டையில் வீடு புகுந்து திருடிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 9:11 pm

DIN

சென்னை ராயப்பேட்டையில் வீடு புகுந்து திருடிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராயப்பேட்டை சந்தாசாகிப் தெருவைச் சோ்ந்தவா் ச.மகாலட்சுமி (46). இவா், கடந்த புதன்கிழமை இரவு வீட்டின் கதவை சாத்திவிட்டு படுத்து தூங்கினாா். இதை நோட்டமிட்ட ஒரு மா்ம நபா், வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த பொருள்களை திருடியுள்ளாா்.

இந்நிலையில் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து மகாலட்சுமி எழுந்துள்ளாா். அப்போது வீட்டுக்குள் மா்ம நபா் நிற்பதை பாா்த்து மகாலட்சுமி அதிா்ச்சியடைந்து, சத்தமிட்டுள்ளாா். உடனே அந்த நபா், அங்கிருந்து தப்பியோடியுள்ளாா். இதையடுத்து மகாலட்சுமி, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரில் தனது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.25,000 ரொக்கம், விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை மா்ம நபா் திருடிச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டிருந்தாா்.

இது தொடா்பாக ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.