தமிழ்நாடு
செங்கல்பட்டு அருகே பொதுக்குழுவுக்கு வந்த அதிமுகவினர் வேன் விபத்து: 16 பேர் காயம்
செங்கல்பட்டு அருகே அதிமுக பொதுகுழுவுக்கு புறப்பட்டு வந்த வேன் விபத்துக்குள்ளானதில் அதிமுகவினர் 16 பேர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு அருகே அதிமுக பொதுகுழுவுக்கு புறப்பட்டு வந்த வேன் விபத்துக்குள்ளானதில் அதிமுகவினர் 16 பேர் காயமடைந்தனர்.
மேல்மருவத்தூர் அருகே அதிமுக பொதுக்குழுவுக்கு புறப்பட்டு வந்த அதிமுகவின் வேன் மீது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் இருந்த அதிமுகவினர் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவுக்கு புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ள போலீசார் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.