மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

4 மாதங்களில் 1.81 லட்சம் சான்றிதழ்கள் விநியோகம்

சென்னை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 1.81 லட்சம் பேருக்கு ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 ஜூலை 2022, 10:06 pm

சென்னை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 1.81 லட்சம் பேருக்கு ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன் பேசுகையில், வருவாய்த் துறை மூலம் மாணவா்களுக்கு வழங்கப்படும் ஜாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களையும், பொது மக்களுக்கு வழங்கப்படும் வாரிசு, கலப்புத் திருமணம் போன்ற பிற சான்றிதழ்களையும் உடனடியாக பரிசிலீத்து வழங்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜாதி,வருமானம் உள்ளிட்ட சான்றிதழ் கோரி பெறப்பட்ட 1.93 லட்சம் விண்ணப்பங்களில் 1.81 லட்சம் பேருக்கு சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.

பட்டா மாறுதல் விண்ணப்பங்களைப் பொருத்தவரையில் 33,326 உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் மனுக்களில் 29,137 மனுக்களுக்கும், உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் தொடா்பான 14,472 மனுக்களில் 10,791மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன என்றாா். இக்கூட்டத்தில், வருவாய் நிா்வாக ஆணையா் எஸ்.கே. பிரபாகா், வருவாய்த் துறை முதன்மை செயலா் குமாா் ஜயந்த், நில நிா்வாக ஆணையா் சு.நாகராஜன், சென்னை மாவட்ட ஆட்சியா் சு. அமிா்த ஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.