கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

திருநள்ளாறு அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் காரை பெயர்ந்து விழுந்து விபத்து

திருநள்ளாறு அருகே அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பறை மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. வகுப்பறையில் மாணவர்கள் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

News image
Updated On :19 ஜூலை 2022, 9:50 am

DIN

காரைக்கால்: திருநள்ளாறு அருகே அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பறை மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. வகுப்பறையில் மாணவர்கள் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே தேனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. திருநள்ளாறு மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் தட்டச்சுப் பாடப்பிரிவுக்கான வகுப்பறைகள் உள்ளன. இந்தக் கூடம் 6 மாதங்களுக்கு முன்பு புனரமைக்கப்பட்டதாகும். மின் இணைப்பு வழங்கவில்லை போன்ற புகார்கள் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு சீரமைப்புப்  பணிகள் நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

Story image

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை புனரமைப்பு செய்யப்பட்ட தட்டச்சுப் பிரிவு வகுப்பறையின் மேற்கூரையிலிருந்து காரைகள் பெயர்ந்து தட்டச்சு இயந்திரங்கள் மீது விழுந்தன. அந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாரும் இல்லாதால் பாதிப்பு பெரியளவில் தவிர்க்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர், கல்வித்துறை அதிகாரிகளுடன் சென்று வகுப்பறையை பார்வையிட்டார். பிற இடங்களில் இதுபோன்ற குறைபாடுகள் இருக்கிறதா  எனக் கண்டறிந்து, அதனை சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில், 'காரைக்காலில் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவலால் பள்ளிகள் முறையாக நடைபெறவில்லை.  கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதா என கண்டறிந்து சீர்செய்யவும் அரசுத்துறை முன்வரவில்லை. இந்த கட்டடங்கள் ஆய்வு செய்யப்படாமலேயே பள்ளிகள் இயங்கத் தொடங்கியது. அண்மையில் புனரமைப்பு செய்த கட்டடத்தின் நிலையே இப்படி என்றால், புனரமைப்பு  செய்யப்படாத கட்டடத்தின் நிலை கேள்விக்குறிதான். இந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக உரிய விசாரணை செய்து, ஒப்பந்ததாரர் மீது  நடவடிக்கை எடுப்பதுடன், அரசு பள்ளிகளின் கட்டடங்களை பொறியாளர்கள் கொண்ட சிறப்புக் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.