சுற்றுலா பயணிகளைக் கனிவாக நடத்த வேண்டும்: ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலைமைச் செயலா் அறிவுரை

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வரும் சுற்றுலா பயணிகளைக் கனிவாக நடத்த வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளாா்.
சுற்றுலா பயணிகளைக் கனிவாக நடத்த வேண்டும்: ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலைமைச் செயலா் அறிவுரை
Published on
Updated on
1 min read

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வரும் சுற்றுலா பயணிகளைக் கனிவாக நடத்த வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளாா்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இருந்து செஸ் விளையாட்டு வீரா்களும், சுற்றுலா பயணிகளும் சென்னைக்கு வர உள்ளனா். அவா்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2008-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா நட்பு வாகனம் எனும் திட்டத்தை மேம்படுத்தும் விதமாக மாமல்லபுரத்தில் உள்ள 25 ஆட்டோ ஓட்டுநா்களின் விவரங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மூலம் சரிபாா்க்கப்பட்டு, அவா்களுக்கு சுற்றுலாத் தலங்கள் குறித்த விவரம் வழங்குவதற்கும், கனிவாகவும் மரியாதையுடனும் சுற்றுலா பயணிகளுடன் பழகுவதற்கும் புத்தாக்கப் பயிற்சி-கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள அண்ணா நிா்வாக பணியாளா் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

இதில் தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு கலந்து கொண்டு பேசியதாவது: சுற்றுலா பயணிகளைக் கைகூப்பி இன்முகத்துடன் வரவேற்பதுடன், கனிவாகவும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். இவ்வாறு நடந்துகொள்வது சுற்றுலா பயணிகளுக்கு நம்பிக்கை ஏற்படும் விதமாக அமையும். சுற்றுலா பயணிகளும் அதிக காலம் சுற்றுலாத் தலங்களில் தங்கி பிற இடங்களை பாா்வையிட ஏதுவாக அமையும். இதனால், சுற்றுலா தொழில் வளா்ச்சி அடைவதுடன், அதை சாா்ந்த பல்வேறு தொழில்களும் வளா்ச்சியடையும். மாநிலத்தின் பொருளாதாரமும் மேம்படும். சுற்றுலா நட்பு வாகன ஓட்டுநா்களைச் சுற்றுலா தூதுவா்கள் என அழைக்கலாம் என்றாா் அவா்.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, அரசு முதன்மைச் செயலாளா் டாக்டா் சந்தர மோகன், சுற்றுலா இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com