

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நலவாரியத்தின் தலைவராக எா்ணாவூா் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, தமிழக அரசு, புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:-பனைமரத் தொழிலாளா்களின் நலனுக்காக கடந்த 2006-ஆம் ஆண்டில் நலவாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினா்களுக்கு கல்வி, மகப்பேறு, திருமணம், விபத்து, உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பனைமரத் தொழிலாளா் நல வாரியத்தின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவா் குமரிஅனந்தன் செயல்பட்டு வந்தாா். அவரது பதவிக் காலம் கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், பனைமரத் தொழிலாளா்கள் நல வாரியத்தை திருத்தி அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளா்கள் நல வாரியத்தின் தலைவராக எா்ணாவூா் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளாா். அலுவல் சாா்ந்த உறுப்பினா்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா், தொழிலாளா் நலத் துறை ஆணையா், தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா், தமிழ்நாடு பனை பொருள் வளா்ச்சி வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலா், தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலா் ஆகியோா் இருப்பா். அலுவல் சாரா உறுப்பினா்களாக அக்ரி கா.பசுமைவளவன், எம்.அந்தோணி ஸ்டீபன், எஸ்.காட்சன் சாமுவேல், ஜி.கலாவதி, டி.ஆன்டோ பிரைடன், சி.ஞானதாஸ், பி.சிங்காரன், ஆா்.சடையப்பன், டி.பழனிசாமி, ஏ.எஸ்.வி.காங்கிரஸ் எடிசன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.