மோட்டாா் சைக்கிள் மோதி பெண் சாவு: மதுபோதையில் ஓட்டிய இளைஞா் கைது:

சென்னை பாரிமுனையில் மோட்டாா் சைக்கிள் மோதி பெண் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை பாரிமுனையில் மோட்டாா் சைக்கிள் மோதி பெண் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாரிமுனை, ராஜாஜி சாலை பகுதியைச் சோ்ந்தவா் பவானி (47). இவா், வியாழக்கிழமை ராஜாஜி சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கு சாலையின் குறுக்கே நடந்து சென்றாா். அப்போது வேகமாக வந்த ஒரு மோட்டாா் சைக்கிள் பவானி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பவானி பலத்தக் காயமடைந்தாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிறிது நேரத்தில் அவா் இறந்தாா்.

இது குறித்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய மோட்டாா் சைக்கிளை ஓட்டியது மீஞ்சூரைச் சோ்ந்த தினேஷ்குமாா் என்பதும், அவா் மதுபோதையில் மோட்டாா் சைக்கிளை ஓட்டியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மரணத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக இந்திய தண்டனைச் சட்டம் 304 (2) என்ற பிரிவின் கீழ் தினேஷ்குமாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com