பெரம்பலூர் அருகே சேதப்படுத்தப்பட்ட கோயில் சிலைகளை மீண்டும் புனரமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலின் உபக்கோயிலான பெரியசாமி, செல்லியம்மன் கோயில் சிலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் சேதப்படுத்தபட்டதையடுத்து, அதை புனரமைப்பதாகக் கூறி யூடுபர் கார்த்திக் கோபிநாத் என்பவர் நிதி வசூல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்த கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் உபக்கோயிலில் உடைக்கப்பட்ட சிலைகள் மீண்டும் நிறுவுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற உள்ளது. சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலில் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும்.
மேலும், சிலைகளின் பாதுகாப்பிற்காக திட்டமிட்டு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். யூடுபர் கார்த்திக் கோபிநாத் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அதிகளவு கருத்து பரிமாற்றம் செய்யும் நிலை இல்லை.
திருக்கோயிலின் மேம்பாட்டுப் பணிகளுக்காக போதிய நிதியை இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கும்.
கோயில் குத்தகை நிலங்கள் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் அளவில் அளவீடு செய்யப்பட்டுள்ளது. பிஜேபி. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டு தங்களின் பயணத்தில் வரும் சிறு சிறு இடையூறாகத்தான் கருதுகிறோம்.
மக்களால் அங்கீகரிக்கப்பட்டது திமுக ஆட்சி. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள கட்சி திமுக. ஆக்கப்பூர்வமான பணிகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெனால்டி கொடுக்காதது ஏன்? இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
6 உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்த ரொனால்டோ!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



