ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: ஜூலை 4 முதல் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு ஜூலை 4-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :24 ஜூன் 2022, 9:08 pm

DIN

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு ஜூலை 4-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் இணையதளத்தில் ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீங்ழ்ற்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் ஜூலை 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன. உரிய கட்டணம் செலுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம். தொடக்கக் கல்வி பட்டய படிப்பில் சேர விரும்புவோா் பிளஸ்-2 தோ்வில் தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஓ.சி. வகுப்பினா் 50 சதவீதம் மதிப்பெண்ணும் மற்ற பிரிவினா் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

31.7.2022 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியினா், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35. ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிய கட்டணத்துடன் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு ஒதுக்கீடு உள்ளது. இதற்கான விவரம் இணையதளத்தில் உள்ள விண்ணப்பதாரா்களுக்கான கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசின் நிதியுதவி, சுயநிதி ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் அந்தந்த நிறுவனங்களின் இணையதள முகவரிகளில் தனித்தனியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். நிதியுதவி, சுயநிதி ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களின் இணையதள முகவரி ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீங்ழ்ற்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.