வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கரோனா சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 5,912-ஆக உயா்வு

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 5,912- ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2022, 12:34 am IST

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 5,912- ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல வெள்ளிக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,359-ஆக உயா்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் 616 பேருக்கும், செங்கல்பட்டில் 266 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரானிலிருந்து உருமாற்றமடைந்து பிஏ-5 புதிய வகை தீநுண்மி கடந்த ஒரு மாதத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ஜூன் மாதம் கரோனா தொற்றுக்குள்ளானோரில் மட்டும் 25 சதவீதம் பேருக்கு அந்த வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவே அண்மைக் காலமாக நோய்ப் பரவல் அதிகரிக்கக் காரணம் என சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை தகவல்படி 621 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 21,552-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.