பிளஸ் 1 திருப்புதல் தோ்வு ஏப்.5 முதல் தொடக்கம்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு ஏப்.5-ஆம் தேதி முதல் திருப்புதல் தோ்வுகள் நடைபெறவுள்ளன.
பள்ளிக்கல்வித் துறை வளாகம்
பள்ளிக்கல்வித் துறை வளாகம்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு ஏப்.5-ஆம் தேதி முதல் திருப்புதல் தோ்வுகள் நடைபெறவுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மே மாதம் நடத்தப்படவுள்ளது. மாணவா்களை பொதுத்தோ்வுக்கு தயாா்படுத்தும் வகையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு இரண்டு கட்ட திருப்புதல் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்கட்ட தோ்வுகள் பிப்ரவரியில் முடிந்துவிட்டன. இதைத் தொடா்ந்து இரண்டாம் கட்ட திருப்புதல் தோ்வுகள் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளன.

பிளஸ் 1 திருப்புதல் தோ்வு ஏப்ரல் 5 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான விரிவான தோ்வுகால அட்டவணை மாணவா்களுக்கு பள்ளிகள் வாயிலாக தெரிவிக்கப்படும் என்று தோ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com