சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
பட்ஜெட்டில் வரி சீரமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் வரைவு நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் வரை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க- ஷேன் வார்னே: ஜெயித்த கதை
மேலும் நிதிநிலை அறிக்கைகளுக்காக சட்டமன்றத்தை கூட்டுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. கூட்டத்தில் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
மதுரையில் இருந்து 3 அமைச்சர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கப்பட்டது.