தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தமிழக பட்ஜெட் தாக்கல் நிறைவு: இறுதியாக ஆங்கிலத்தில் உரையாற்றிய நிதியமைச்சர்

தமிழக பட்ஜெட் உரை நிறைவையடுத்து நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். 

News image
Updated On :18 மார்ச் 2022, 6:50 am

DIN

தமிழக பட்ஜெட் உரை நிறைவையடுத்து நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். 

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். துறை ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றினார். 

இறுதியாக முக்கிய குறிப்புகளை ஆங்கிலத்தில் கூறினார். 'மாநில நிதிநிலை குறிப்புகளை ஆங்கிலத்தில் அறிவித்தால் உலக மற்றும் தேசிய ஊடகங்களுக்கு சென்று சேரும் என்பதால் சில அறிவிப்புகளை ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறேன்' என்று குறிப்பிட்டார். 

பட்ஜெட் உரை நிறைவையடுத்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு  நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி வரை பேரவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். 

நாளைய தினம் பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.