அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

மானாமதுரை ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது. 

News image
கொடியேற்றம் முடிந்து கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது
Updated On :23 மார்ச் 2022, 6:51 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது. 

மானாமதுரையில் ஊர் பெரிய கோயிலான ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்குவதற்கு முன்னர் ஊர் எல்லை தெய்வமான ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கொடியேற்றத்தின்போது சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த உற்சவர்.

கொடியேற்றத்தின்போது சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த உற்சவர்.

இதையொட்டி உற்சவர் ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து புறப்பாடாகி அண்ணாசிலை  ரயில்வேகேட் அருகேயுள்ள ஸ்ரீ எல்லைப் பிடாரி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினார். அதன்பின்னர் அங்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்று கொடி மரத்திற்கும் மூலவர், உற்சவர் பிடாரி அம்மனுக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் எல்லைப் பிடாரி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோயிலில் மாவிளக்கு பூஜை வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கோயில் திருவிழா நிறைவடைந்ததும் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்குகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.