போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்னப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முதல்வரின் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர் துறை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி பேசியதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து நேற்று (மார்ச் 29) பெருமளவு பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 32 சதவிகித பேருந்துகள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன. இதனால் பயணிகள், பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று தமிழகம் முழுவதும் நேற்றை விட அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 92 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது.
எஸ்.எஸ். சிவசங்கரிடம் போக்குவரத்துத் துறை
ராஜகண்ணப்பன் நிர்வகித்து வந்த போக்குவரத்துத் துறை எஸ்.எஸ்.சிவசங்கரிடம் வழங்கப்பட்டுள்ளது. 52 வயதாகும் எஸ்.எஸ். சிவசங்கர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளராக இருக்கிறார். இவர் திமுக முன்னாள் எம்.பி.யும். மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ். சிவசுப்பிரமணியன் மகன் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம்! முதல்வர் கலைஞரிடம் விஜய் வழங்கினார்!

சரக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

அண்ணா, விரலை வெட்டி அனுப்பவா? ரசிகைக்கு விஜய் அளித்த பதில் என்ன?







