தமிழக கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் முழுநிலவு விழா கொண்டாடப்படும். அதன்பேரில் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அதற்காக தமிழக - கேரள மாநிலங்களின் தேனி, இடுக்கி மாவட்ட வருவாய், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேக்கடியில் உள்ள ராஜீவ்காந்தி அரங்கத்தில் நடைபெற்றது.
தமிழக அரசு தரப்பில் தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளிதரன், காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக காப்பாளர் ஆனந்த், தேனி மாவட்ட வன அலுவலர் திவ்யா, இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ், பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குனர் சுனில் பாபு மற்றும் காவல், வனம், வருவாய், போக்குவரத்து, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.