பிளஸ் 1 மாணவர்களுக்கு ஏப்.25 முதல் செய்முறைத் தேர்வு

பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 
பிளஸ் 1 மாணவர்களுக்கு ஏப்.25 முதல் செய்முறைத் தேர்வு
Published on
Updated on
1 min read

பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதும் பொதுப்பிரிவு, தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தோ்வுகளை ஏப்ரல் 25 முதல் மே 2-க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

அனைத்து செய்முறைத் தோ்வுகளும் முடிவுற்ற பின்னா், மதிப்பெண் பட்டியல்களை தலைமையாசிரியா்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மே 9ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com