

கைதிகளிடம் இரவு நேரங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
சத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு திருவண்ணாமலை மற்றும் சென்னையில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக டிஜிபி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகம் முழுவதும் வழக்குகளில் கைது செய்யப்படும் அனைவரையும் மாலை 6 மணிக்குள் சிறைகளில் அடைக்க வேண்டும். கைதிகளிடம் இரவு நேரங்களில் விசாரணை நடத்தக் கூடாது. கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் இனி வைத்திருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.