கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணப்பாறையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

மணப்பாறை அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட உற்சவம் இன்று நடைபெற்றது.

News image
பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:16 am

DIN

மணப்பாறை அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட உற்சவம் இன்று நடைபெற்றது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பொது முடக்கத்தால் திருவிழா நடைபெறவில்லை. 

Story image


மணப்பாறை அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் திருக்கோயில்.

இந்நிலையில், நிகழாண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் சிறப்பு வாய்ந்த பால்குடவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்ச்சையாக நடைபெற்று வருகிறது.
 
கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கிய திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் இருந்து பாலுசாமி நாயுடு மற்றும் நல்லுச்சாமி நாயுடு வகையறா மண்டகப்படியின்படி, கோயில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி தலைமையில் ஆலய பால்குடங்கள் புறப்பட்டு மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் மேளதாளங்கள், நாதஸ்வரம் முழங்க ராஜவீதிகளின் வழியாக சென்ற அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 

Story image

ஆலய பால்குடம்

அதனைத்தொடர்ந்து மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் குழந்தை வரம்வேண்டியவர்கள் குழந்தை பாக்கியம் அடைந்ததால் கரும்புத்தொட்டில் கட்டிவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

Story image

பால்குடம் எடுத்த திருநங்கைகள்

காலை 6 மணிக்கு தொடங்கிய பால்குட ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து பால்குடங்களும் கோவிலுக்கு வந்தடைந்தபின் சுமார் 3 லட்சம் லிட்டர் பாலால் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்படவுள்ளது. 

Story image

பக்தர்களுக்கு காப்புகளைய உதவும் காவல்துறையினர்

திருவிழாவையொட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பரம்பறை அறங்காவலர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.