போலீஸார் விசாரணையில் குஞ்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குட்டி (எ)பழனிசாமி, ஜேசிபி இயந்திரம் வைத்து பணி செய்து வந்ததாகவும், இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பணி செய்ததில் பலரது அறிமுகம் கிடைத்துள்ள நிலையில், நேற்று மாலை குட்டியை புதன் அன்று இரவு செல்போனில் தொடர்பு கொண்ட வழக்குரைஞர் ஒருவர் தனக்கு அறிமுகமான நபர்கள் நால்வர் உங்கள் வீட்டிற்கு வருவார்கள் அவர்களுக்கு இரவு மட்டும் தங்க இடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், வழக்குரைஞர் தகவல் தெரிவித்த சிறிது நேரத்திலேயே நான்கு இளைஞர்கள் குட்டி இருந்த வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் குட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோதே சென்னையிலிருந்து அவர்களைப் பின்தொடர்ந்து வந்த தனிப்படை போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து அழைத்துச் சென்று விட்டதாகவும், சென்னையிலிருந்து வந்த நான்கு நபர்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.