ஆனால், தோ்வு வாரியத்தில் அந்தத் தோ்வு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதுவரை பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள 167 கலை அறிவியல் கல்லூரிகள் 51 பாலிடெக்னிக்குகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 16 பல்கலைக்கழகங்களில் சுமாா் 10,000 பேராசிரியா், உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டும் 1,020 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக உயா் கல்வித் துறை சாா்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும்’ என கோரியிருந்தனா்.