சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த வந்த முனீஸ்வா் நாத் பண்டாரி செப் 12-ல் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், செப் 21ஆம் தேதியுடன் அவரும் ஓய்வுபெற்றார்.
இதனைத் தொடர்ந்து, உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா செப்.22ஆம் தேதி பொறுப்பேற்றார்.
இதையும் படிக்க | ஆள்குறைப்பு பணியை தொடங்கியது அமேசான்! இந்தியாவில் எத்தனை பேர்?
இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக முரளிதரனை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ள நிலையில், இன்னும் அனுமதி வழங்கவில்லை.
இதனால், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.