சென்னை குரோம்பேட்டையில் ரூ.110 கோடியில் புதிய மருத்துவமனை கட்டப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பதாவது:
குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் வட்ட அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு மாவட்ட மருத்துவனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் ரூ.110 கோடியில் புதிய மருத்துவமனை கட்டப்படவுள்ளது. 5 ஏக்கர் நிலத்தில் கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளன. குரோம்பேட்டை மருத்துவமனை ஒருங்கினைந்த மகளிர் - குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும்.
இதையும் படிக்க: மோடிக்கு எதிராக.. நிதீஷ், தேஜஸ்வியுடன் கூட்டணி சேரும் சிவசேனை?
தமிழ்நாட்டில் தினமும் அரசு மருத்துவமனைகளில் 6 லட்சம் புற நோயாளிகளுக்கும், 70,000 உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிலர் அவதூறு பரப்பி விளைவிக்க முயற்சி செய்கிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.