கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பூர் ரயில் நிலையத்தில் சர்ச்சைக்குரிய ஹிந்தி பலகை அகற்றம்

திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த ஹிந்தி பலகை பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அழிக்கப்பட்டது.

News image

திருப்பூர் ரயில் நிலையத்தில் சர்ச்சைக்குரிய ஹிந்தி பலகை அகற்றம்

Updated On :29 நவம்பர் 2022, 9:10 am

DIN


திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த ஹிந்தி பலகை பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அழிக்கப்பட்டது.

திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகையை மறைத்தபடி, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த பலகை வைக்கப்பட்டது. தமிழில் சேவை மையம் என்பதற்கு பதிலாக சகயோக் என்று எழுதப்பட்டிருந்தது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு என்று கண்டித்திருந்தனர்.

மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும்  பொதுமக்களுக்கு சேவை வழங்கும் ரயில் நிலையத்தில் தமிழில் தான்  அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். கூடுதலாக  வேண்டுமானால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை வைத்துக் கொள்ளலாம். ஆனால்,  திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ்ச் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற ஹிந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. ஹிந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது  புரியாது. இது புதிய வகை ஹந்தித் திணிப்பாகும் என்று பாமக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் இன்று காலை இந்த ஹிந்தி திணிப்பு தகவல் பலகையை அகற்றியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.