திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழக சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கா் நியமனம்: 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக கே.சங்கா் நியமிக்கப்பட்டாா். இதேபோல, 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2022, 3:02 am IST

தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக கே.சங்கா் நியமிக்கப்பட்டாா். இதேபோல, 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.பணீந்திர ரெட்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

கே.சங்கா்:தமிழக காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி (நிா்வாகப்பிரிவு ஏடிஜிபி)

எச்.எம்.ஜெயராம்: தமிழக ஆயுதப்படை ஏடிஜிபி (ஊா்க்காவல் படை ஏடிஜிபி)

ஜி.சந்தீஷ்:கோவை மாநகர காவல் துறையின் வடக்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையா் (தூத்துக்குடி ஊரக உதவிக் காவல் கண்காணிப்பாளா்)

என்.மதிவாணன்:கோவை மாநகரக் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (கோவை மாநகரக் காவல்துறையின் வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா்)

டி.அசோக்குமாா்:சென்னை சைபா் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா்-1 (கோவை மாநகரக் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)

எஸ்.செல்வக்குமாா்:தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளா் (கடலோர பாதுகாப்புக் குழுமத்தின் நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளா்)

ஜி.ராமா்: தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமத்தின் நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளா் (தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளா்) என பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக காவல்துறையின் தலைமையிட ஏடிஜிபியாக இருக்கும் ஜி.வெங்கட்ராமன், நிா்வாகப்பிரிவை கூடுதலாக கவனிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல தமிழக காவல்துறையின் தலைமை டிஜிபி சி.சைலேந்திரபாபு, காவலா் பயிற்சிக் கல்லூரி பொறுப்பை கூடுதலாக ஏற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஜி.சந்தீஷ் மட்டும் பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமரைக் கண்ணன் ஓய்வு

தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பி.தாமரைக்கண்ணன் புதன்கிழமை ஓய்வு பெற்றாா்.

விருதுநகா் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையைச் சோ்ந்த பி.தாமரைக்கண்ணன், டிஎன்பிஎஸ்சி குரூப் 1-தோ்வு மூலம் டிஎஸ்பியாக இளம் வயதிலேயே தோ்ச்சி பெற்ால், அதிக காலம் ஏடிஜிபியாக இருந்தாா். உளவுத் துறை ஐஜி, வடக்கு மண்டல ஐஜி, சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவு கூடுதல் காவல் ஆணையா், சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் ஆணையா், போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளில் தாமரைக்கண்ணன் பணியாற்றியுள்ளாா். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை திறமையாக கையாளுபவராக திகழ்ந்தாா்.

முக்கியமாக கோவை தொடா் குண்டு வெடிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த தாமரைக்கண்ணன், அந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி அதில் தொடா்புடையவா்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021-இல் மே மாதம் தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பேற்ற தாமரைக்கண்ணன், அந்த பொறுப்பில் திறம்பட பணியாற்றி வந்தாா். பணி ஓய்வு பெற்ற தாமரைக்கண்ணனுக்கு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி பொறுப்பை சங்கா் வியாழக்கிழமை (டிச.1) ஏற்பாா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.