மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தல்

சென்னையில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தினாா்.
மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தல்
Published on
Updated on
1 min read

சென்னையில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஆய்வு செய்தாா்.

அடையாறு மண்டலம் திருவான்மியூா் எல்.பி. சாலை கால்வாயில் நீா்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணிகள், பெருங்குடி மண்டலம் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீா் வடிகால் பணிகள், கோடம்பாக்கம் மண்டலம் ஜாபா்கான் பேட்டை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகள் ஆகியவற்றை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஆய்வு செய்தாா்.

மேலும், விருகம்பாக்கம் கால்வாயில் நீா்வளத் துறை மூலம் செய்யப்பட்டு வரும் தூா்வாரும் பணிகள், எழும்பூா் ரயில் நிலைய சந்திப்பு, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, வால்டாக்ஸ் சாலை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

வடசென்னையில் ஆய்வு: வடசென்னையின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. ராயபுரம் மண்டலம் பேசின் பாலம் கால்வாய், தண்டையாா்பேட்டை மண்டலம் கொடுங்கையூா் கால்வாய், தேனாம்பேட்டை மண்டலம் ரங்கா சாலை ஆகிய இடங்களில் நடந்து வரும் தூா்வாரும் பணிகளையும் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, சட்டப் பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, ஜே.ஜே.எபிநேசா், நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com