ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ரத்தினகிரி: இருசக்கர வாகன விபத்தில்  2 பேர் பலி

ரத்தினகிரி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். 

News image
Updated On :16 அக்டோபர் 2022, 5:58 am

DIN


ராணிப்பேட்டை: ரத்தினகிரி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். 

ராணிப்பேட்டை மாவட்டம்  ஆற்காடு அடுத்த தாழனூர் ஊராட்சி ராமநாதபுரம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 55). இவர் ஊராட்சி குடிநீர் பம்ப் ஆபரேட்டராக வேலைசெய்து வருகிறார். திமுக பிரமுகரான  இவர் சனிக்கிழமை இரவு  மோட்டார் சைக்கிளில் வேலூரில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, ஆற்காடு அருகே ரத்தனகிரி அடுத்த நந்தியாலம் ஊராட்சி பூஞ்சோலை நகர் சோலையபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில்  செல்லும் போது போது பின்னால் வந்த  வேலூர் மாவட்டம் லத்தேரி முத்தியால்பேட்டை ரங்கன் கேட் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாண்டுரங்கன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள்மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே  பலியானார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீஸார் வழக்குப்பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.