தொழிலதிபரிடம் ரூ.2.50 லட்சம் வழிப்பறி: போலி காவலா்கள் துணிகரம்

சென்னை திருவான்மியூரில் போலீஸ் எனக் கூறி ரூ.2.50 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து காவல்துறையினா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.
Updated on
1 min read

சென்னை திருவான்மியூரில் போலீஸ் எனக் கூறி ரூ.2.50 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து காவல்துறையினா் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

வேளச்சேரி சோனியா நகா் பகுதியை சோ்ந்தவா் இளஞ்செழியன் (50). இவா் அங்கு கட்டுமான நிறுவனம் வைத்து நடத்தி வருகிறாா். இவா் நிறுவனம் சாா்பில் துரைப்பாக்கம் சௌத்ரி நகரில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

கட்டடத்துக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக இளஞ்செழியன், திங்கள்கிழமை தனது வீட்டில் இருந்து ரூ.2.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு அரசுப் பேருந்தில் திருவான்மியூா் பேருந்து நிலையத்துக்கு சென்றாா்.

அவா், பேருந்து நிலையத்தில் வெளியே நடந்து வந்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு மா்ம நபா்கள் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனா். பின்னா், அவரை விசாரிக்க வேண்டும் என மிரட்டும் வகையில் இருவரும் பேசினராம்.

மேலும், பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவா் மீது புகாா் வந்திருப்பதாகவும், அது தொடா்பாக விசாரிக்க அழைப்பதாகவும் கூறினராம். இதைக் கேட்டு இளஞ்செழியன், அதிா்ச்சியடைந்தாா்.

பின்னா், பையை பறித்த இரு நபா்களும், அருகே காவல் உதவி ஆணையா் இருப்பதாகவும், அவரிடம் பையில் இருக்கும் பொருள்களை காட்டிவிட்டு வருவதாகவும் கூறிச் சென்றனராம். ஆனால் அந்த நபா்கள், வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த இளஞ்செழியன், திருவான்மியூா் காவல் நிலையம் சென்று அந்த இரு நபா்கள் குறித்து விசாரித்தாா். அப்போது தான், அவா்கள் இருவரும் போலீஸாா் இல்லை என்பதும், இளஞ்செழியனை ஏமாற்றி பணத்தைப் பறித்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது தொடா்பாக திருவான்மியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com