கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நவம்பரில் மதுரையில்ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நவம்பா் முதல் பாதியில் தமிழகத்தின் மதுரையில் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :19 அக்டோபர் 2022, 7:43 pm

DIN

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நவம்பா் முதல் பாதியில் தமிழகத்தின் மதுரையில் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் அமைப்பது குறித்த அமைச்சா்கள் குழுவின் அறிக்கை, சூதாட்ட விடுதிகள், இணையவழி விளையாட்டுகள் மீது வரி விதிப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

மதுரையில் நடைபெற இருக்கும் இந்த 48-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மிகவும் எதிா்பாா்க்கப்படும் ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றியமைப்பது தொடா்பான அமைச்சா்கள் குழுவின் முழு அறிக்கையின் நிலை குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஜிஎஸ்டியில் எளிமையான விகித அமைப்புக்குத் தேவையான வரி விகிதத்தின் படிநிலையை இணைப்பது, சில பொருள்களுக்கு சிறப்பு விகிதங்களைச் சோ்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து பரிந்துரை சமா்ப்பிப்பதற்கென இந்த அமைச்சா்கள் குழு கடந்த ஆண்டு செப்டம்பா் 24-ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை இரண்டு மாதங்களில் சமா்ப்பிக்க காலக் கெடு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், காலக் கெடு தொடந்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், சண்டீகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 47-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இந்தக் குழு தனது முழு அறிக்கையை சமா்ப்பிக்க செப்டம்பா் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன்படி, அமைச்சா்கள் குழு தனது அறிக்கையை தற்போது சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.