புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முகப்போ் பிஎஃப் அலுவலகத்தில் நவ.10-இல் குறைகேட்பு கூட்டம்

குறைதீா் கூட்டம் சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும் நவ.10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 8:14 pm

DIN

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடா்பான வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும் நவ.10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து பி.எஃப். மண்டல உதவி ஆணையா் டி.ராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆா் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ் சாலை, முகப்போ் கிழக்கு, சென்னை-37’ என்ற முகவரியில் நவ. 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடா்பான வாடிக்கையாளா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்கள், நிறுவனங்களின் உரிமையாளா்கள், பி.எஃப். பங்களிப்பிலிருந்து விலக்கு பெற்ற அம்பத்தூா் எல்லைக்கு உள்பட்ட நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 என்ற அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.