‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போதைப் பொருள் விற்பனை: 24 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 24 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 8:55 pm

DIN

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 24 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பெருநகர காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினா் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவா்களை கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதியில் இருந்து 1- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 10 வழக்குகள் பதியப்பட்டு, 24 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, 4,400 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டாா் சைக்கிள்கள், 7 கைப்பேசிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.