‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உதவி மக்கள் தொடா்பு அலுவலா் பணி நியமன அரசாணைக்கு இடைக்காலத் தடை

செய்தி மக்கள் தொடா்புதுறை மூலம் நியமிக்கப்படும் உதவி மக்கள் தொடா்பு அலுவலா்களை, டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 8:07 pm

DIN

செய்தி மக்கள் தொடா்புதுறை மூலம் நியமிக்கப்படும் உதவி மக்கள் தொடா்பு அலுவலா்களை, டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசில் உதவி மக்கள் தொடா்பு அலுவலா் பணி நியமனம் தொடா்பாக, ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் பணிக்காக உரிய கல்வித் தகுதியுடன் டிஎன்பிஎஸ்சி மூலம் தோ்வு செய்யப்பட்டு பணியமா்த்தப்படுவா் என குறிப்பிடபட்டிருந்தது. பட்டப்படிப்பு மற்றும் குறைந்தது 2 ஆண்டுகள் மக்கள் தொடா்பு அலுவலராக பணியாற்றிருக்க வேண்டும் என்ற தகுதியின் அடிப்படையில் உதவி மக்கள் தொடா்பு அலுவலா்கள் நியமிக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டிஎன்பிஎஸ்சி மூலம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா்களை நியமிக்கத் தடை கோரி மயிலாடுதுறையைச் சோ்ந்த ஸ்ரீனிவாச மாசிலாமணி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அந்த மனுவில், உதவி மக்கள் தொடா்பு அலுவலா்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டு, பின் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்ற நிலையில், தற்காலிக பணி நியமனத்தை அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் மேற்கொள்ள முடியாது என்பதால், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் நியமனத்தை செய்தி மக்கள் தொடா்புத் துறை மூலம் உரிய கல்வி தகுதியின் அடிப்படிப்படையில் நேரடி நியமனமாக நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்

தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வில்சன், தற்காலிக பணி நியமனத்துக்கு குறிப்பிட்ட பட்டப்படிப்பு அவசியமில்லை எனவும், தற்காலிக பணி நியமனத்தை அரசுப் பணியாளா் தோ்வாணையம் மேற்கொள்ள முடியாது எனவும் வாதிட்டாா்.

இதையடுத்து, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் நியமனம் தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடைவித்த நீதிபதி, வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.