சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் நாளை முன்னிட்டு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் குறிப்பாகத் தமிழ் நாட்டின் ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது பண்டைய இந்தியப் பாரம்பரிய மரபாகும்.

ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர். சுதந்திர இந்தியாவின் அமுதப் பெருவிழாக் காலத்தின் அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் விரிவான எழுச்சிக் காலமாகும்.
இத்தருணத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com