ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசனத்துக்கு  நடவடிக்கை!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 9:47 am

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் சுமார் 300 கோடி செலவில் பக்தர்களுக்கான மெகா திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

இத்திட்டம் தொடங்கி முடிவடையும் காலத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும், கந்த சஷ்டி விழாவில் திருக்கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்திடவும் அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக திருக்கோயில் பணியாளர்களின் கருத்துக்கேட்பு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. 

திருக்கோயில் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்திற்கு, அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன் தலைமை வகித்தார். இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ம.அன்புமணி, அலுவலக கண்காணிப்பாளர் சீதாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் பங்கேற்ற திருக்கோயில் பணியாளர்கள் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதியை மேம்படுத்த வேண்டும், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதை குறைப்பதற்காக வரிசைப்பாதையில் மாற்றம் செய்திட வேண்டும், கடற்கரையில் அவசரக் கால பயன்பாட்டுக்காக ஸ்டெச்சர் தேவை எனவும் வலியுறுத்தினர். 

இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறங்காவலர்குழுத்தலைவர் இரா.அருள்முருகன் பணியாளர்களிடம் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.