ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 5:59 am

DIN


சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

விராலிமலை அருகே இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் மதுரையில் சி. விஜயபாஸ்கரின் நண்பர் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

250 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை இயங்கி வருவதாக தவறான தகவல் அளிக்கப்பட்டநிலையில், வேல்ஸ் அறிவியல் மைய நிர்வாகத்துக்கு விஜயபாஸ்கர் உதவியுள்ளார் என்று குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டை, மஞ்சாங்கரையில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க, விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, தேசிய மருத்துவக் குழுமத்தின் விதிகளுக்கு முரணாக 2020ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் அறிவியல் மையம் முழுமையாக 250 படுக்கைகளுடன் முழுமையான மருத்துவமனையாக இயங்குவதாக தவறான தகவல்அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 300 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்குத்தான் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற விதிமுறையும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மருத்துவமனை செயல்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளதும், முறைகேடு நடந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.