பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சாத்தான்குளம் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதி விபத்து:  தொழிலாளி பலி, 2 பேர் காயம்

சாத்தான்குளம் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். காயமடைந்த இரண்டு பேர் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published On :1 பிப்ரவரி 2024, 3:49 pm IST


சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். காயமடைந்த இரண்டு பேர் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலம்பாடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி மகன் வாசுதேவன் (22) இவரது அண்ணன் பிரபுவின் திருமண புதன்கிழமை நடந்தது. திருமண நிகழ்ச்சிக்கு சென்னையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த உறவினர்கள் கருவேலம்பாடு தெற்குதெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் கமல்(38) கீழ புளியங்குளத்தை சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் விஜயகுமார் (27) ஊருக்கு வந்திருந்தனர். 

புதன்கிழமை மாலை மூன்று பேரும் ஓரே பைக்கில் சாத்தான்குளம் வந்துவிட்டு ஊர் திரும்பினார். ஆனந்தபுரம் கல்லறை தோட்டம் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த சுமை ஆட்டோ பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த மூன்று பேரும் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு முதல் சிகிச்சை பெற்று நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமல் உயிரிழந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப் பதிவு செய்தார். ஆய்வாளர் பாஸ்கரன் விசாரணை நடத்தி தலைமறைவான சுமை ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகிறார்.

அடிக்கடி விபத்து
ஆனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், பழங்குளம் விலக்கு, கல்லறைத் தோட்டம் அருகில் அடிக்கடி விபத்து நடைபெற்று உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க இருபுறங்களிலும் மூன்று அடுக்கு கொண்ட வேகத்தடை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.