சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக நிரந்தரப் பாதை திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை மெரினா கடற்கரைக்கு மாற்றுத் திறனாளிகள் சென்று இயற்கைச் சூழலை ரசிக்கும் பொருட்டு, ஒரு கோடி ரூபாய் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தரப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு நிரந்தரப் பாதை அமைக்கும் பணிகளை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் கடற்கரை பகுதிக்குச் செல்லும் வகையில் மெரினா கடற்கரையில் ஒரு கிமீ தூரத்துக்கு பாதை அமைக்கப்படுகிறது.
இதையும் படிக்க | இந்த 6 அழகுப் பொருள்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ளலாம்!