பிளஸ் 2 வகுப்பு முடித்துவிட்டு உயா் கல்வியில் சேராத 8,588 மாணவா்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பு முடித்த 79,792 மாணவா்கள் உயா்கல்வி சோ்ந்துள்ளாா்களா என்று பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 8,588 மாணவா்கள் எந்தவித உயா் கல்வியிலும் சேரவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இவா்களை தனித்தனியாக தொடா்பு கொண்டு ஆலோசனை வழங்க பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவா்களின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.