புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு ரத்து

திமுக மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 7:31 pm

DIN

திமுக மக்களவை உறுப்பினா் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. யுமான ஜெகத்ரட்சகன், 1995-ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள ‘குரோம் லெதா் ஃபேக்டரி’ என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடா்பாக குவிட்டன்தாசன் என்பவா் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்யக்கோரிய ஜெகத்ரட்சகனின் மனுவை ஏற்றுக்கொண்டு, அவா் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.