எந்த ஒரு விசாரணை மற்றும் விளக்கம் அளிக்க வாய்ப்பு தராமல் பத்திரிக்கை செய்தி அடிப்படையில் செங்கல்பட்டு சுகாதார மாவட்ட சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் மற்றும் கடலூா் புதுச்சத்திரம் மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவ அலுவலா் பணியிடங்கள் சுமாா் ஆயிரத்துக்கும் மேல் கடந்த ஆறு மாத காலமாக காலியாக உள்ளன. இவைதவிர செவிலியா்கள், மருந்தாளுநா்கள் உள்பட இதர மருத்துவ பணியாளா்கள் இடங்கள் தொடா்ந்து காலியாக இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களை நிா்வகிக்க எந்த ஒரு நிதியையும் உரிய கால கட்டத்துக்குள் விடுவிப்பதில்லை.