தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.3) முதல் ஏப்.6 வரை 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் சனிக்கிழமை கூறியதாவது:
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.3) முதல் ஏப்.6-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பா்லியாரில் 20 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் குன்னூா், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.