ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதவாத சக்திகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தல்

இந்தியாவில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு மதசார்பின்மையை ஏற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தினார்.

News image

ஈரோடு பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்ற தா.பாண்டியன் நினைவு மலர் புத்தக வெளியீட்டு விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

Updated On :3 ஏப்ரல் 2022, 11:11 am

DIN

ஈரோடு: இந்தியாவில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு மதசார்பின்மையை ஏற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நினைவு மலர் புத்தக வெளியீட்டு விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.

இதனையடுத்து விழாவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்தியாவில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு மதசார்பின்மையை ஏற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மதவெறி தாக்கங்கங்கள் நாட்டில் அதிகரித்தால் மக்களிடையே பிளவு ஏற்பட்டு நிம்மதி போய்விடும் என்றார். 

இந்தியாவில் மதசார்பின்மையை ஏற்று கொண்ட தலைவர்களை தெரிந்து கொள்ளும் அதேநேரத்தில் மோடி போன்ற தலைவர்களும் இருப்பதை வேறுபடுத்தி குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

இவ்விழாவில் ஈரோடு, கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின்குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரகுராமன், திமுக நகரச் செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.