தமிழக சட்டப்பேரவை இன்று கூடவுள்ள நிலையில் அதிமுக பேரவை உறுப்பினர்களுடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாா்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை இன்று காலை மீண்டும் கூடுகிறது. இதில், நீா்வளத் துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில், சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்றைய கூட்டம் தொடங்கியவுடன், சொத்து வரி உயர்த்தியது குறித்து விவாதம் செய்ய அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது.