கரோனா குறைந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்துள்ள போதிலும் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்துள்ள போதிலும் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன். கூறியுள்ளார்.

முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்புப் பற்றி மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுருத்தியுள்ளார்.

கரோனாவை ஒழிப்பதே நோக்கம் என்றாலும் ஒரு சில மாவட்டங்களில் கவனம் தேவை என்றும், கரோனா ஒருநாள் பாதிப்பு 20 ஆக குறைந்துள்ள போதிலும் தற்போது ஆங்காங்கே சற்று உயர்ந்து வருகிறதாக ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com