சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்துள்ள போதிலும் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன். கூறியுள்ளார்.
முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா தடுப்புப் பற்றி மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுருத்தியுள்ளார்.
கரோனாவை ஒழிப்பதே நோக்கம் என்றாலும் ஒரு சில மாவட்டங்களில் கவனம் தேவை என்றும், கரோனா ஒருநாள் பாதிப்பு 20 ஆக குறைந்துள்ள போதிலும் தற்போது ஆங்காங்கே சற்று உயர்ந்து வருகிறதாக ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.