நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்:  சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை

கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

News image

கும்பக்கரை அருவியில் ஏற்பட்டுள் காட்டாற்று வெள்ளம்.

Updated On :14 ஏப்ரல் 2022, 5:04 am

DIN


கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் சில நாள்களாக மழை பெய்து வந்தது. இதனால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் வியாழக்கிழமை காலை முதல் கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

காட்டாற்று வெள்ளத்தால் சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு செல்ல பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டதையடுத்து, இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர்.

சீரான நீர்வரத்து ஏற்படும் வரை அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.